திருக்கோவிலூர், அக். 18: திருக்கோவிலூர் அடுத்த வேங்கூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் சுரேஷ் (31), கோவிந்தன் மகன் அர்ஜூனன் (33) ஆகிய இருவரும் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். பின்னர் திருக்கோவிலூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.