முத்துப்பேட்டை, அக்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மற்றும் சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் காவல்துறை ஆகியவை இணைந்து டெங்கு தடுப்பு தூய்மைப்படுத்தும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முன்னதாக சுகாதாரத்துறை மற்றும் துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து சங்கேந்தி பேருந்து நிலையத்தைச்சுற்றி குவிக்கப்பட்டுள்ள குப்பைகளையும், விளம்பர சுவரொட்டிகளையும் சுத்தம் செய்தனர். பேருந்து நிலையத்தில் உள்ளே பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் யாரேனும் பேருந்து நிலையத்திற்கு விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது.