சீர்காழி, அக்.18: வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலைய சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பக்தர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோயிலுக்கு சென்று வருகின்றனர்.