கரூர்: கரூர் காந்திசாலையின் மையப்பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினை விரைந்து மூடிட வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கருர் நகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் காந்திசாலை பகுதி உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளன. இருப்பினும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து இந்த சாலையில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையின் மையப்பகுதியின் உட்புறம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.