கரூர்: கரூர் பெரியகுளத்துப்பாளையம் புதிய குகைவழிப்பாதையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து பெரிய குளத்துப்பாளையம் பகுதிக்கு ரயில்வே பாதையை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டனர். வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கரூரில் இருந்து எளிதில் போக்குவரத்து நடைபறும் நோக்கில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேறி இருக்கிறது. சமீபத்தில் திறப்புவிழா கண்ட இந்த குகை வழிப் பாதையில் மழைநீர் புகுந்து விடுகிறது.