உடுமலை, அக். 17: உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையில் இருந்து குமரலிங்கம் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சாலையை சேதமடைந்து வருகிறது. உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையில் இருந்து குமரலிங்கம் செல்லும் சாலையில், குருவப்பநாயக்கனூர் உள்ளது. இங்குள்ள சாலையில், கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலையை அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் பெரும்பகுதி காணாமல் போய் மண்ணாக காட்சி அளிக்கிறது. அந்த வழியே வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.