திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், அக்.17: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: