ஊட்டி, அக்.17: ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் தாவரவியல் பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இரண்டாம் சீசனுக்கான தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் மழை ஓய்ந்த நிலையில், இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். ஆனால், தற்போது மீண்டும் நாள்தோறும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இதனால், பூங்காவில் உள்ள மலர் செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேரிகோல்டு, டேலியா போன்ற மலர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.