முகாம் சிறையில் உள்ள 8 இலங்கை தமிழர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்

திருச்சி, அக் 17: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 35 இலங்கை தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளை 60 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்களான நிமலன், அகில்தாஸ், தாரகன் உள்பட 8 பேரை போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு தப்பி செல்ல முயன்றதாக கடந்த 3 மாதங்களுக்கு முன் கைது செய்த சென்னை க்யூ பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி முகாம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி 8 பேரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று 3வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories: