முதியோர் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தல்

திருச்சி, அக்.17: முதியோர் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டுமென ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருச்சியில் மாவட்ட ஓய்வூதியர் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராசப்பா வரவேற்றார். கூட்டத்தில் அரசு ஆணை 363ன் படி ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய பணிப்பதிவேடு (எஸ்ஆர்) கிடைக்காத நிலையில் பின்பற்ற செயல்முறைகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும். முதியோர்கள் பாதுகாப்பு சட்டம் 2007ஐ கடுமையாக செயல்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  துணைச் செயலாளர் சங்கரநாரயணன் நன்றி கூறினார்.

Related Stories: