திருச்சி, அக்.17: சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு திருச்சி சிறைத்துறை டிஐஜி நிதியுதவி வழங்கினார்.திருச்சி மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி விசைத்தறி, தையற்கூடம், சோப்பு கூடம், காகிதக் கூடம், புத்தகம் கட்டுதல், சிறை அங்காடி, வெளி பணி குழு, குற்ற மேற்பார்வையாளர், குற்ற காவலர் என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்கள் வேலை செய்வதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளால் பாதிக்கப்பட்டோருக்கு அதில் ஒரு பகுதி பிடித்தம் செய்து அரசு கணக்கில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கும் நலநிதியாக வழங்கப்படுகிறது.