ஈரோடு, அக். 17:ஈரோட்டில் தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஈரோடு ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் பாரத் (32). டெக்ஸ்டைலில் மடிகாரர். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அம்மாபேட்டை தாதம்பட்டியை சேர்ந்த மயில்வாகனம் மகள் கவிதா (27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கவிதா நேற்று முன்தினம் பாரத்திடம் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டார். இதற்கு பாரத், கவிதாவின் அம்மா கொடுத்த பணத்தில் துணி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.