ஈரோடு, அக். 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சங்க தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதை பெற குறுகிய காலத்தில் நிபந்தனைகளை எளிதாக்கி கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க வாட்ஸ்-அப் எண், இ-மெயில் முகவரியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். பல மாதமாக உதவித்தொகை பெற மனு அளித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.