ஜெயங்கொண்டம், அக். 17: ஜெயங்கொண்டம் அருகே பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கஸ்தூரி (50). இவர் தனது வீட்டின் முன்பு பித்தளை பாத்திரங்களை கழுவி காய வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார். பி்ன்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது காய வைத்த பாத்திரங்களை திருடி கொண்டு 2 பேர் சென்றனர். இதை பார்த்து கஸ்தூரி சத்தம் போட்டதும் மர்மநபர்கள் 2 பேர் தப்பியோடினர்.