தீயணைப்புத்துறை செயல்விளக்கம் தெப்பத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி

விருதுநகர், அக். 17: விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (27), நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் காளியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு, தெப்பத்திற்கு வந்து முறைப்பாரி கரகம் எடுக்க தெப்பத்தில் இறங்கி உள்ளார். இதில், தவறி விழுந்தவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உள்ளார். விருதுநகர் தீயணைப்புத்துறையினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பஜார் போலீசில் ராமகிருஷ்ணன் தந்தை ராமச்சந்திரன் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மது விற்றவர் கைது: சாத்தூர் அருகே, ஒ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், டூவிலரில் மது விற்ற ஒத்தையால் கிராமத்தை சேர்ந்த மாரிகண்ணு (38) என்பவரை, சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: