குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மதுரை, அக். 17: மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் சேகர் (27). இவர் மதுரையில் நடந்த கொலை மற்றும் கொலை முயற்சி  வழக்குகளில் போலீசாரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்மூலம், பொது ஒழுங்கிற்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இவரது இத்தகைய சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் நேற்று சேகரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து. மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: