நாமகிரிப்பேட்டையில் தமிழ்புலிகள் கட்சி பொதுக்கூட்டம்

நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், அரசியல் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வினோத் சேகுவேரா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அறிவுதமிழன், செந்தமிழன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கட்சி நிறுவனர் நாகை. திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கார்த்தி, ராஜேந்திரன், கோவிந்தசாமி, இளமுருகன், கோபி, குமரவேல், பேரறிவாளன், இளவேனில், சித்தார்த்தன், செல்வன், முகிலரசன், கலைவேந்தன், முத்துகுமார், முருகானந்தம், ராவணன்  மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: