வாழப்பாடி. அக்.17: வாழப்பாடியில், விவசாய கடன், நகை கடன் தொடர்பாக கிளை மேலாளர் மீது போலீசில் பரபரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(51). விவசாயியான இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சிங்கிபுரம் கிளையில் கடந்த 9.4.18ம் தேதி 11 சவரன்(91.20 கிராம்) நகையை அடகு வைத்து ₹1.49 லட்சம் விவசாய கடன் வாங்கியுள்ளார். அதே வங்கி கிளையில் மற்றொரு கணக்கு மூலமாக 13.11.16ம் தேதியில் ₹50 ஆயிரம் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாததால் வராக்கடனாக இருப்பதாக கூறி, அடமான நகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 10 மாதத்திலேயே ஏலம் விட்டுள்ளனர். ஆனால், அதற்கான தொகையை வரவு வைக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், லோகநாதனுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ₹47,501 கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வங்கி கிளைக்கு சென்று கேட்டபோது, ₹56000 செலுத்த வேண்டும் என மேலாளர் தெரிவித்துள்ளார்.