காவேரிப்பட்டணத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்கா

வேரிப்பட்டணம், அக். 17:  காவேரிப்பட்டணத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக  பொதுமக்களுக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பேரூர் செயலாளர்  கார்த்திக் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கணேஷ்குமார்,  பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்து  பேசினார்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், மாவட்ட  பேரவை செயலாளர் அறிவழகன் சமரசம் சாபுதீன், ராஜரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி,  மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: