அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

அரூர்,அக்.17: அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, அரூர் வட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் சங்கர், இணை செயலாளர் தமிழ்அகமது, வட்ட செயலாளர் வேடியப்பன், வட்ட குழு வேலு, பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவவ் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாற்றுதிறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக நடத்த வேண்டும், குறைதீர் கூட்டத்தில் மருத்துவர்களை வரவழைத்து அடையாள சான்று, ரயில் பாஸ், பேருந்து உதவியாளர் பாஸ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். உதவி தொகைக்கு விண்ணப்பத்துள்ளவர்களின் பட்டியலை தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: