 மூகாம்பிகை பாலிடெக்னிக்கில்

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

காரிமங்கலம், அக்.17: பாலக்கோட்டை அடுத்த மாதம்பட்டியில் இயக்கி வரும்  மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில், டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. ஸ்ரீ லஷ்மி சரஸ்வதி அறக்கட்டளை தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசினார். அறக்கட்டளை செயலாளர் மதன்மோகன் வரவேற்று பேசும் போது அப்துல் கலாம் வழியில் மாணவ, மாணவிகள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர். அறக்கட்டளை செயல் இயக்குநர் மாதுலம்பூ, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சிவகுமார் நன்றி கூறினார்.

Related Stories: