கரூர், அக். 17: மாற்றுத்திறனாகளிக்கு சுயதொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது என குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கரூர்கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு சுயதொழில் தொடங்கவும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தேவையான செயற்கை கால், காதொலிக் கருவிகள், சர்க்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என பல்வேறு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த முகாமில், சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோர்களுக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டன. உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.