தக்கலை: தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி வருவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி உதவி ஆய்வாளர் எபநேசர் மற்றும் போலீசார் அப்பகுதியில் சென்று குறிப்பிட்ட அந்நபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையின் போது, அவர் கேரள மாநிலம் மைலக்கரையைச் சேர்ந்த லாஜி மார்டின் தாமஸ் (38) என்பதும், முளகுமூட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 3 மாதமாக ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.