நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை எஸ்பி ஆய்வு

நாகை, அக்.17: நாகை காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் அனைத்து உட்கோட்டங்களில் இயங்கிவரும் வாகனங்களை எஸ்பி ராஜசேகரன் ஆய்வு செய்தார்.அப்போது வாகனங்களை பழுது இல்லாமல் நல்ல முறையில் பராமரித்து வைத்து கொள்ள வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் அவசியம் சீட்பெல்ட அணிந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என்றார். டிஎஸ்பி முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: