விவசாயிகள் கோரிக்கை மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாகை, அக்.17: இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜ அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை அவரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகும் போக்கை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து நகர பகுதியிலும் விரிவுப்படுத்த வேண்டும். அனைத்து விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எம்பி செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: