விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். எம்பிக்கள் நவாஸ்கனி, காங்கிரஸ் விஷ்ணு பிரசாத், திமுக செல்வம், எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் சுந்தரம், முகமது அபுபக்கர், மாவட்டசெயலாளர் அமீர் அப்பாஸ், நகர செயலாளர் சம்சுதீன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது காதர்மொய்தீன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக, இன்று நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் எதிர்கால கனவை தகர்த்துள்ளனர். புதிய கல்வி கொள்கை மூலம், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற முடியாமல் அவர்களை பழைய நிலைமை படியே கூலித் தொழிலாளிகளாக மாற்றக் கூடிய நிலையை உருவாக்கி உள்ளார்.