அரசு பள்ளியில் ஓவியப்போட்டி

உளுந்தூர்பேட்டை,  அக். 17: உளுந்தூர்பேட்டை அருகே சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான ஓவிய  போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கருணாகரன் முன்னிலையில் நடைபெற்ற  இந்த ஓவிய போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது  திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் சிறப்பாக  செயல்பட்ட மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பச்சையம்மாள்  உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: