சின்னசேலம், அக். 17:
சின்னசேலம் அருகே மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சின்னசேலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(27). இவர்களுக்கு சுப என்ற 7வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுப தற்போது காளசமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். வழக்கம்போல கடந்த 14ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி சுபயை பாடம் எழுதும்போது கையெழுத்து சரியில்லை என்று அவரது வகுப்பு ஆசிரியர் சரவணன் பிரம்பால் அடித்துள்ளார். இதில் சுபயின் முதுகு மற்றும் கைகளில் ரத்த தழும்பு ஏற்பட்டுள்ளதுடன், தலையிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த மாணவி பள்ளிக்கு போகவில்லை.