வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் சின்னம் பொருத்தும் பணியை வாக்குசாவடி நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.  தொகுதியிலுள்ள 275 வாக்குச்சாவடிகளுக்காக 344 கன்ட்ரோல் யூனிட், 344 வாக்குப்பதிவு யூனிட் மற்றும் 358 விவிபேட் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க மண்டல வாக்குச் சாவடி அலுவலர்கள் மேற்பார்வையில் 150 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார்கள் பார்த்தீபன், மனோகரன், தேர்தல் துணை தாசில்தார்கள்  சிவா, அரிதாஸ் வருவாய் உதவியாளர்கள் உட்பட பலர் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: