கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பண்ருட்டி, அக். 17:  பண்ருட்டி அருகே மேட்டாமேடு பகுதியில் கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் முருகவேல் தலைமையில் 650 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் மழைக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர் பாரத் கருணாநிதி, உதவியாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: