திருத்தணி அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 16 சவரன் கொள்ளை

திருத்தணி, அக். 17: திருத்தணி அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் புகுந்து 16 சவரன் நகை மற்றும் ₹15 ஆயிரம் ெராக்கத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி அடுத்த சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேதினபுரம் கிராமத்தில் வசிப்பவர் தங்கவேல் (55).  கட்டிட தொழிலாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தங்கவேல், தனது மனைவி மரகதத்துடன் அருகில் உள்ள கிராமத்தில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தது.  16 சவரன் நகை மற்றும் ₹15 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தங்கவேல் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

Related Stories: