காஞ்சிபுரம், அக்.17: மாவட்ட அளவிலான பெண்கள் மைய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.மஹிலா சக்தி கேந்திரா எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள மாவட்ட அளவிலான பெண்கள் மையத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளன.எனவே, அந்த காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.