தண்டையார்பேட்டை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இளையமகள் சபரியம்மாள் (16) என்பவரை கேரளாவில் வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தை தொழிலாளி என்ற முறையில் கேரளா போலீசார் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் சபரியம்மாள் ஒரு வருடத்திற்கு முன்பு பிராட்வே பிடாரியார் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.