காரைக்குடியில் பலத்த மழை

காரைக்குடி, அக்.16:  காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காரைக்குடி, கழனிவாசல், கோட்டையூர், பள்ளத்தூர், கண்டனூர், அமராவதிபுதூர், மானகிரி, கோவிலூர் போன்ற பகுதிகளிலும் அதிகாலை முதலே மேகம் இருண்டு இடியுடன் கன மழை பெய்ய துவங்கியது. பள்ளி மாணவ,மாணவிகள் செல்லும் வேளையில் பெய்த மழையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பகல் பொழுதில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

Related Stories: