கோவை, அக். 16: கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், இணை, துணை இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக 6 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவையில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவற்றிற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 10ம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய பிசி, எம் பிசி, எஸ்சி, எஸ்சி.ஏ, எஸ்டி ஆகிய வகுப்பினருக்கு உச்ச வரம்பு இல்லை. இதற்கான அறிவிப்பு //dish.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.