சென்னிமலை, அக்.16: சென்னிமலை ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இளைஞர்களின் கல்வி எழுச்சி நாளான நேற்று அப்துல் கலாமின் வெண்கல சிலைக்கு கல்லூரி தலைவர் மக்கள் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கேஎம்கே நிறுவனங்களின் தலைவர் கண்ணன், தியாகி திருப்பூர் குமரன் வாரிசு அண்ணாதுரை, குமரன் நற்பணி மன்றம் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அப்துல்கலாமின் குரலில் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினர். பின்னர், அங்கு மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் சிலைக்கு கல்லூரி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.