சின்னசேலம் கோயிலில் நகை, பணம் திருட்டு

சின்னசேலம், அக். 16: சின்னசேலம் காந்தி நகர் பகுதியில் செருவத்தூர் சாலையில் கருப்பசாமி கோயில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் ஆகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலில் கும்பா

பிஷேகம் நடந்தது. இதையொட்டி இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாட்டிற்கு செல்லும் போதெல்லாம் பணம், நகைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் இந்த உண்டியலில் ஏராளமான பணம், நகைகள் சேர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் கருப்பசாமி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஊர் முக்கியஸ்தர்களிடம் தகவல் கூறினார்கள். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் சேர்ந்த சுமார் ரூ.5லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளை போனது குறித்து சின்னசேலம் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: