திருவெண்ணெய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்
3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ்(32). இவரது மனைவி ஜோதி. கடந்த 11ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு ஜோதி பெண்ணைவலத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மாலை சிவராஜ் தன் மனைவியை அழைத்து வருவதற்காக மாமனாரின் வீட்டிற்கு சென்றார்.அப்போது ஜோதியின் உறவினருக்கும், சிவராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஜோதியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சிவராஜை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து தன் வீட்டிற்கு திரும்பி வந்த சிவராஜ் மீண்டும் மறுநாள் 12ம் தேதி அதிகாலை பெண்ணைவலம் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் ஜோதியின் உறவினருக்கு சொந்தமானது என்று நினைத்துக்கொண்டு அதை அடித்து உடைத்துள்ளார்.