கெலமங்கலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை, அக்.16: கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவன் தலைமையிலான போலீசார் கெலமங்கலம் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவரது சட்டை பாக்கெட்டில் 250 கிராம் கஞ்சா கிடைத்தது. அவரை ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில் கெலமங்கலம் மேல் தெருவை சேர்ந்த பிரதாப் மகன் உன்னிகிருஷ்ணன்(24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் மீது கஞ்ச வழக்கு போட்டு கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: