தண்டையார்பேட்டை, அக். 16: சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் மலர்கொடி (51). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மகன் அழகுராஜா (31). இவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி மலர்கொடி தனது மகன் அழகுராஜா மற்றும் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), விஜயகுமார் (20) உள்ளிட்ட மேலும் சிலருடன் ஆட்டோ ஒன்றில் எழும்பூர் சென்றார். பின்னர், அதே ஆட்டோவில் அங்கிருந்து வீடு புறப்பட்னர். புதிய தலைமைச் செயலகம் அருகே பிளாக்கர்ஸ் சாலையில் சென்றபோது, மற்றொரு ஆட்டோவில் வந்த கும்பல், இவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில், மலர்கொடி காயமடைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அழகுராஜா ஆட்டோவில் தயாராக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து எதிர் தரப்பினர் மீது வீசினார். இதைத் தொடர்ந்து அரிவாளால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.