சாத்தான்குளம், அக். 16: சாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தலைமை வகித்த ஆசீர்வாதபுரம் சேகரகுரு தாமஸ் ரவிக்குமார், ஜெபித்து விழாவைத் துவக்கிவைத்தார். பள்ளித் தாளாளர் வக்கீல் தியோனிஸ் சசிமார்சன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். சாத்தான்குளம் டிஎஸ்டி பால்துரை விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதில் சாத்தான்குளம் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், உடன்குடி தொழிலதிபர் விஜேந்திரராஜ் வாழ்த்திப் பேசினர். போட்டிகளி பச்சைநிற அணியினர் முதலிடமும், மஞ்சள் நிற அணியினர் 2ம் இடமும் வென்றனர்.