விளாத்திகுளம், அக். 16: விளாத்திகுளத்தில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள், பனை விதைகள் நடும் விழா நடந்தது. விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியில் விளதைமலர் வாட்ஸ்அப் குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் இளைஞர்களிடையே மரம் வளர்த்தல் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் விழா நடத்தப்பட்டது.
இதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகள், பனை விதைகள் நாட்டினர்.