நாசரேத், அக். 16: நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமைவகித்தார். பள்ளிமுதல்வர் அனி ஜெரால்டு முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் வரவேற்றார்.
சுகாதார ஆய்வாளர் பால் ஆபிரகாம், கிராம சுகாதார செவிலியர் சுதா சிறப்புரையாற்றினர். இதில் பங்கேற்ற மாணவர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்து நாடகம் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் தடுக்கும் சிகிச்சை முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி முதல்வர் மகிலா சரவணன் நன்றி கூறினார்.