தூத்துக்குடி, அக். 16: தூத்துக்குடிநகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டிவெளியிட்ட செய்திக்குறிப்பு: வாகைகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (17ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தொழிற்பேட்டை அந்தோணியார் புரம் மறவன்மடம், வல்லநாடு, பொட்டலூரணி, தெய்வச்செயல்புரம், முருகன்புரம், முடிவைத்தானேந்தல், கூட்டாம்புளி, குலையன்கரிசல், கூட்டுடன்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.