தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை துவக்கம்

சென்னை, அக். 16: கேரளாவில் இதுவரை நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை இன்றுடன் விடை பெறுவதை அடுத்து,  தமிழகத்தில் நாளை முதல் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திலும் பரவலாக  மழை பெய்தது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயிலால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக  மழை பெய்தது. சில இடங்களில் இயல்பை மீறிய மழையும், சில இடங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பெய்துள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மீண்டும் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வந்த தென் மேற்கு பருவ மழை இன்றுடன் விடை பெற உள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும். தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்யத் ெ தாடங்கும். இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேல் அ டுக்கில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் 1.5 கிமீ வரை நீடித்துள்ளது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. அதனால் பெரும் பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளதால், கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். முக்கிய துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு 1, 2 ஏற்றப்பட்டுள்ளன.

Related Stories: