வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 2.3 லட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில்

நாகர்கோவில், அக். 16: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ஜோபின்மேரி(58). இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறப்படுகிறது. கண்டன்விளையை சேர்ந்த ஸ்டீபன் ஜார்ஜ் என்பவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ஜோபின்மேரி கூறியுள்ளார். அதன்பேரில் ஸ்டீபன் ஜார்ஜ், அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து 2 லட்சத்து 30 ஆயிரத்தை ேஜாபின் மேரியிடம் வழங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட ஜோபின்மேரி அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் ஜோபின் மேரி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று ஜோபின்மேரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: