திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலையில் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி. இவர். கடந்த மாதம் 18ம் தேதி காஞ்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, ஆடையூர் கிராமத்தை சேர்ந்த தேவதாஸ்(34) என்பவர், சப்- இன்ஸ்பெக்டர் ரவியிடம் தகராறு செய்தார். மேலும், கத்தியை காட்டி மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.