வந்தவாசியில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை

வந்தவாசி, அக்.10: வந்தவாசி டவுன் கே.எஸ்.கே நகரை சேர்ந்தவர் மொய்தீன்(55), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றார். கடந்த 6ம் தேதி உடல் உடல் நலக்குறைவு அதிகமானது. இதனால் வேதனையடைந்த மொய்தீன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: