அணைக்கட்டு, அக்.10: ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் 5 மாதமாக பிறப்பு, இறப்பு சான்று வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைக்கட்டு தாலுகா ஊசூரில் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஊசூர், தெள்ளூர் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்படட்வர்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், மருத்துவமனையில் பிறக்கம் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழும், சிகிச்சை பலனின்றி இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்கப்பட்டு வந்தது. சான்றுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு பின்னர், ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்தது.