சென்னை, அக்.9: ஏரியில் விதிமுறைகளுக்கு முரணாக சவுடு மண் எடுப்பதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் திருவண்ணாமலை கலெக்டர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஜி.கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள எடத்தனூர் கிராமத்தில் மாந்தோப்பு ஏரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நீராதாரமார உள்ளது. இந்த ஏரியில் தூர்வாறும் பணிக்கான அனுமதி எடத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரா அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் ஏழுமலை என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏரி, குளங்களை தூர்வாறும்போது அங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தவதற்கு பயன்படுத்தப்படும். ஆனால், மாந்தோப்பு ஏரியில் எடுக்கப்படும் சவுடு மண் வியாபார நோக்கத்தில் வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.